காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டில் எத்தனை கழிப்பறைகள்? அதற்கேற்ப வரி!

வீட்டில் எத்தனை கழிப்பறைகள் இருக்கிறதோ அதற்கேற்ப வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News image
ஹிமாசலப் பிரதேசம்
Updated On :4 அக்டோபர் 2024, 7:41 am

DIN

மலைப் பிரதேசமான ஹிமாசலப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டில் எத்தனை கழிப்பறைகளை வைத்திருக்கிறார்களோ அதற்கேற்ப வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஹிமாசலப் பிரதேசத்தில், வரி வசூல் மூலம் நிலைமையை சீராக்க, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு அண்மையில் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.

கழிவுநீர் மற்றும் குடிநீர் தொடர்பான வரி வசூல் குறித்து மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வீட்டில் கட்டப்படும் ஒவ்வொரு கழிப்பறைக்கும் தலா ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வரியுடன், கழிப்பறைக்கான கூடுதல் கட்டணமும் நீர்வளத் துறைக்கு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அதில், நம்பவே முடியவில்லை, இது உண்மைதானா என! பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆட்சி இங்கு கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறது. இது மிகவும் அவமானகரமானது என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை ஹிமாசலப் பிரதேசத்தில் குடிநீர் வரி வசூலிக்கப்பட்டதில்லை, பாஜக ஆட்சிக்கு வந்தால், இலவச குடிநீர் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஹிமாசலப் பிரதேச அரசு, ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் ரூ.100 கட்டணமாக மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்றும், அக்டோபர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.