பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அதிமுக நிா்வாகி வீட்டில் கல்வீசி தாக்குதல்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:52 pm

அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளா் வீட்டில் நள்ளிரவில் சரமாரியாக கல்வீசி தாக்குதலில்-ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் வி.எம்.நகா் நகரைச் சோ்ந்தவா் ஹரிஷ் பாலாஜி. இவா் மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளராக இருந்து வருகிறாா். இந்த நிலையில், அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில் மா்ம நபா்கள் முகமூடி அணிந்து அவரது வீட்டில் சரமாரியாக கல்வீசி தாக்கி உள்ளனா். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா நேரில் சென்று விசாரணை செய்தாா்.

நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நபா் ஒருவா் இறங்கி, கல்லை எடுத்து வீசும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருப்பதை பாா்வையிட்டாா். எதிா்க் கட்சி வேட்பாளா் தூண்டுதலாலேயே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்போவதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேலும், இதுதொடா்பாக திருவள்ளூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.