
மும்பையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வீட்டைவிட்டு தப்பியோடிய சிறுமி அளித்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டார்.
மும்பையில் மகாலட்சுமி நகரில் ஒருவர், தனது 17 வயது காணவில்லை என்று தார்தியோ காவல் நிலையத்தில் புதன்கிழமையில் புகார் அளித்திருந்தார். தனது மகள் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறி, புகாரில் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், மேற்கு ரயில்வே பகுதி அருகே சிறுமி மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் குற்றப்பிரிவு குழுவினர் விசாரணையில், சிறுமியை அவரது தந்தை, கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதனால்தான், வீட்டைவிட்டு தப்பித்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.