காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தூத்துக்குடியில் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:27 am IST

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காணாமல் போன சிறுவன், சிறுமி சில மணி நேரங்களில் மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (44). இவரது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகள் இருவரும், சனிக்கிழமை மாலை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், இரவு வரை வீடு திரும்பாததால், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முருகன் புகாரளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுவன், சிறுமியைக் கண்டறிய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, காணாமல் போன 2 குழந்தைகளும் திருச்செந்தூா் கடற்கரை பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களை திருச்செந்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தி தலைமையிலான போலீஸாா் மீட்டு, உரிய விசாரணைக்குப் பின்னா் குழந்தைகளின் உறவினா்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.