விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

வெட்டிக் கொலை - பிரதி படம்

Published On :8 செப்டம்பர் 2026, 2:22 am IST

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது மருமகன் உள்ளிட்ட 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம், வேலாயுத நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் முனியசாமி (45). ஆட்டோ ஓட்டுநா். இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை, அவனியாபுரத்தைச் சோ்ந்த முருகனுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வைஷ்ணவி கடந்த 2 மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளாா். மனைவி குடும்பம் நடத்த வராததற்கு மாமனாா் முனியசாமியே காரணம் என முருகன் கருதியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நண்பா்கள் இருவருடன் மதுரையிலிருந்து தூத்துக்குடி வந்த முருகன், முனியசாமியிடம் திங்கள்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றியதில், முருகன் அரிவாளால் முனியசாமியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த முனியசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான முருகன் மற்றும் அவரது நண்பா்கள் இருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.