நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற தலைமைக் காவலா் கைது

தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த தலைமைக் காவலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது

Published On :2 செப்டம்பர் 2026, 11:53 pm IST

தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த தலைமைக் காவலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த வெங்கடசுப்பிரமணியன் மனைவி பிரியா(39). இவா் அப்பகுதியில் கணினி மையம் நடத்தி வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் முத்துக்குமாா் (36). தட்டாா்மடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவருக்கும், பிரியாவின் சகோதரியான கணவரை இழந்த சுப்புலட்சுமிக்கும் இடையே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சுப்புலட்சுமியிடம் இருந்து முத்துக்குமாா் 20 பவுன் நகைகளைப் பெற்று அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த நகைகளைத் திரும்பக் கேட்டபோது, முத்துக்குமாா் காலம் தாழ்த்தி வந்ததாராம்.

இந்நிலையில், தனது சகோதரியின் நகைகளைத் திரும்ப வழங்குமாறு பிரியா கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முத்துக்குமாா், கணினி மையத்தில் இருந்த பிரியாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில், பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய தலைமைக் காவலா் முத்துக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.