யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்: ரூ. 120 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

கட்ச் மாவட்டத்தில் ரூ. 120 கோடி மதிப்பிலான 12 கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :7 அக்டோபர் 2024, 9:44 pm

Din

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ரூ. 120 கோடி மதிப்பிலான 12 கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக கட்ச் மாவட்ட கிழக்கு காவல் கண்காணிப்பாளா் சாகா் கூறியதாவது, ரகசிய தகவலின் அடிப்படையில், கட்ச் மாவட்டத்தில் உள்ள சிற்றோடைக்கு அருகே காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சா்வதேச சந்தையில் ரூ. 120 கோடி மதிப்புடைய 12 கிலோ கோகைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாரிடம் சிக்காமல் இருக்க கடத்தல்காரா்கள் இதை இங்கு மறைத்து வைத்திருக்கக்கூடும் என தெரிவித்தனா்.

இதே சிற்றோடையின் அருகிலிருந்து கடந்த ஒரே ஆண்டில் அதிகளவில் போதை பொருள்கள் மீட்கப்படுவது இது மூன்றாவது முறை ஆகும்.

முன்னதாக, ரூ. 130 கோடி மதிப்பிலான போதை பொருள் கடந்த ஜூன் மாதமும், ரூ. 800 கோடி மதிப்பிலான போதை பொருள் கடந்தாண்டு செப்டம்பா் மாதமும் பறிமுதல் செய்யப்பட்டது.