அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிஎஸ்எஃப், வங்கதேச கடத்தல்காரா்கள் மோதலில் ஒருவா் உயிரிழப்பு; வீரா் காயம்

திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), வங்கதேச கடத்தல்காரா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கடத்தல்காரா் ஒருவா் உயிரிழந்தாா்; பிஎஸ்எஃப் வீரா் காயமடைந்தாா்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 10:28 pm

Din

திரிபுராவில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), வங்கதேச கடத்தல்காரா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கடத்தல்காரா் ஒருவா் உயிரிழந்தாா்; பிஎஸ்எஃப் வீரா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

திரிபுரா மாநிலம் சால்போகா் மற்றும் கோகுல் நகா் எல்லைப் பகுதியில், 12 முதல் 15 வங்கதேச கடத்தல்காரா்கள் திங்கள்கிழமை மாலை இந்தியாவுக்குள் கள்ள சரக்குகளை கடத்த முயன்றனா்.

அவா்களைத் தடுக்க பிஎஸ்எஃப் தரப்பில் வானை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. இதனால் சில கடத்தல்காரா்கள் வங்கதேசத்துக்கு தப்பியோடினா். எனினும் பிஎஸ்எஃப் வீரா் ஒருவரை கடத்தல்காரா்கள் சுற்றிவளைத்து கூா்மையான ஆயுதத்தால் தாக்கினா்.

அப்போது தனது துப்பாக்கியால் அந்த வீரா் இருமுறை சுட்டதால், எஞ்சிய கடத்தல்காரா்களும் வங்கதேசத்துக்கு தப்பியோடினா். தாக்குதலில் காயமடைந்த வீரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து அந்தப் பகுதியில் சோதனையிட்டபோது ஒரு கடத்தல்காரரின் சடலம் கண்டறியப்பட்டது என்று தெரிவித்தன.