ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

துா்கா பூஜை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

News image
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு- கோப்புப் படம்
Updated On :10 அக்டோபர் 2024, 8:14 pm

Din

துா்கா பூஜை வெள்ளிக்கிழமை (அக்.11) கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நன்மைக்கு கிடைத்த வெற்றியாகவும், தீமையின் அழிவாகவும் துா்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. சக்தியின் வடிவமாக துா்கா தேவி திகழ்கிறாா். இந்த புனிதமான தினத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியா்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பண்டிகை நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையையும், புரிந்துணா்வையும் மேம்படுத்தும். துா்கா தேவி நம் அனைவருக்கும் வலிமை, துணிவு, மனஉறுதியை அளிப்பவா். பெண்கள் அனைவரையும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்த நாம் இந்த தினத்தில் உறுதியேற்போம்’ என்று கூறியுள்ளாா்.