புது தில்லி: நவராத்திரியின் எட்டாவது நாளான மகா அஷ்டமி தினத்தை முன்னிட்டு, இன்று காலை நாடு முழுவதுமிருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டன.
ஏராளமான மக்கள் கோயில்களுக்கு வந்து சுவாமியை வழிபாடு செய்தனர். குறிப்பாக துர்கை அம்மன் கோயில்களில் மிகச் சிறப்பான வழிபாடு செய்யப்பட்டது.
மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மகா அஷ்டமி மற்றும் ஆயுதபூஜை பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரியின் எட்டாவது நாள் துர்கா பூஜையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கோயில்களிலும், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
குஜராத் மக்கள் பல இடங்களில் கர்பா நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். துர்கை அம்மனை வழிபடும் வகையில் கர்பா நடனங்கள் ஆடி கடவுளை வழிபட்டு வருகிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளில் ராம் லீலை எனப்படும் நிகழ்ச்சியும் நவராத்திரியை முன்னிட்டுக் கொண்டாடப்படுவது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

தில்லி ஜண்டேவாலன் கோயிலில் நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு மற்றும் தரிசனம் செய்த பக்தா்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


