6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகா அஷ்டமி: நாடு முழுவதும் கோயில்களில் இன்று காலை சிறப்பு வழிபாடு

நவராத்திரியின் எட்டாவது நாளான மகா அஷ்டமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதுமிருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடு..

News image
<P>DURGA POOJA064104.JPG</P>- Center-Center-Kochi
Updated On :11 அக்டோபர் 2024, 6:31 am

பிடிஐ

புது தில்லி: நவராத்திரியின் எட்டாவது நாளான மகா அஷ்டமி தினத்தை முன்னிட்டு, இன்று காலை நாடு முழுவதுமிருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டன.

ஏராளமான மக்கள் கோயில்களுக்கு வந்து சுவாமியை வழிபாடு செய்தனர். குறிப்பாக துர்கை அம்மன் கோயில்களில் மிகச் சிறப்பான வழிபாடு செய்யப்பட்டது.

மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மகா அஷ்டமி மற்றும் ஆயுதபூஜை பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரியின் எட்டாவது நாள் துர்கா பூஜையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கோயில்களிலும், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குஜராத் மக்கள் பல இடங்களில் கர்பா நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். துர்கை அம்மனை வழிபடும் வகையில் கர்பா நடனங்கள் ஆடி கடவுளை வழிபட்டு வருகிறார்கள்.

நாட்டின் பல பகுதிகளில் ராம் லீலை எனப்படும் நிகழ்ச்சியும் நவராத்திரியை முன்னிட்டுக் கொண்டாடப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.