ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

மகாராஷ்டிர பல்கலை.க்கு ரத்தன் டாடா பெயர்! அமைச்சரவை ஒப்புதல்

ரத்தன் டாடாவின் பெயரை பல்கலைக்கழகத்துக்கு வைக்கும் முடிவு பற்றி...

News image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா

Updated On :14 அக்டோபர் 2024, 3:28 pm IST

மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்துக்கு தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை வைக்க மகாராஷ்டிர அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மும்பை நகருக்குள் உள்நுழையும் சாலைகளில் உள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா பெயர்

மும்பையில் உள்ள மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

15 நாள்களில் 150 முடிவுகளுக்கு ஒப்புதல்

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி வருகின்றது.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த சனிக்கிழமை மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு இரங்கல் தீர்மானம் உள்பட 150 முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.