மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிர பல்கலை.க்கு ரத்தன் டாடா பெயர்! அமைச்சரவை ஒப்புதல்

ரத்தன் டாடாவின் பெயரை பல்கலைக்கழகத்துக்கு வைக்கும் முடிவு பற்றி...

News image
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா
Updated On :14 அக்டோபர் 2024, 9:58 am

DIN

மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்துக்கு தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை வைக்க மகாராஷ்டிர அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், மும்பை நகருக்குள் உள்நுழையும் சாலைகளில் உள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா பெயர்

மும்பையில் உள்ள மகாராஷ்டிர திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

15 நாள்களில் 150 முடிவுகளுக்கு ஒப்புதல்

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி வருகின்றது.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த வாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த சனிக்கிழமை மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு இரங்கல் தீர்மானம் உள்பட 150 முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.