வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தில்லி, உ.பி.யில் ரூ.14,115 கோடிக்கு சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தில்லி, உத்தர பிரதேசத்தில் ரூ.14,115 கோடிக்கு சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

News image

நெடுஞ்சாலை - ENS

Updated On :2 ஜூலை 2026, 2:01 am IST

தில்லி, உத்தர பிரதேசத்தில் ரூ.14,115 கோடிக்கு சாலைத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து புது தில்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் வசந்த் குஞ்ச், நெல்சன் மண்டேலா சாலையுடன் துவாரகை விரைவுச் சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-148ஏஇ-க்கான ஆறு வழிச் சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 8.1 கி.மீ தொலைவிலான இந்தச் சாலை திட்டம் ரூ.6,969.67 கோடி மூலதன செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதேபோல உத்தர பிரதேசத்தில் ரூ.7,145.14 கோடி செலவில் 117.7 கி.மீ. தொலைவுக்கு கான்பூா்-கப்ரை பசுமை வழி நெடுஞ்சாலை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.