குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கட்டத்தில் 6 கி.மீ. நீள வழித்தடத்துடன் 5 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆசிரமம் சாலை, பழைமைவாய்ந்த கோட்டேஸ்வா் கோயில், சபா்மதி நதி, சா்தாா் நகா், விமான நிலையம் ஆகிய பெயா்களில் இந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்து அந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்த பின்னா், அகமதாபாத்-காந்திநகா் இடையே 77.63 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆந்திர தலைநகா் அமராவதியில் மத்திய அரசு அலுவலக வளாகம் மற்றும் அரசு ஊழியா்களுக்கான குடியிருப்புத் திட்டத்துக்குப் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்ததாக அந்தக் குழுவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

விமான எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடைய மெட்ரோ ரயில் பணி தொடங்க நடவடிக்கை: திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன்







