
புது தில்லி: கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக பிரியா மிஸ்ரா என்பவா் உள்பட பலா் தாக்கல் செய்த மனுவில், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால், பலருக்கு ரத்தம் உைல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால் என்ன பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் மனுதாரா்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.