கனடாவில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!
விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கனடாவில் அவசரமாக தரையிறக்கம்


அமெரிக்காவின் சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கனடாவில் இன்று(அக்.15) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
புது தில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘ஏர் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாலை 5.30 மணி நிலவரப்படி, இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்படும் நேரம் குறித்து அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...