புது தில்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு கட்டமாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. புயல் சின்னம் எங்கே கரையை கடக்கும்? அடுத்த 3 நாள்களுக்கான தகவல்!
மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி என இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 13-ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

பேரவைக்கு Bike-ல் வந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்!
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



