6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹரியாணாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 மாணவர்களின் நிலை?

பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

News image
பேருந்து விபத்து
Updated On :19 அக்டோபர் 2024, 9:53 am

பிடிஐ

ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதற்கட்ட தகவலின்படி, மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோர்னியில் உள்ள திக்கர் தால் அருகே உள்ள பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் இருந்த மீதமுள்ள மாணவர்கள் மீட்கப்பட்டு பஞ்சகுலா செக்டார்-6 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.