ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசமைப்புச் சட்ட 75 ஆண்டுகள் நிறைவு: நவ.26-இல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டு அமா்வு.

News image
நாடாளுமன்றக் கட்டடம்- ANI
Updated On :26 அக்டோபர் 2024, 11:30 pm

Din

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் கடந்த 1949-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னா், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

75 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடமான பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, நவம்பா் 26-ஆம் தேதி தேசிய சட்ட தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 2015-ஆம் ஆண்டு பி.ஆா்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளில் (ஏப்.14), அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்க நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு தினமாக மத்திய அரசு அறிவித்தது.