சட்டவிரோத பரிவா்த்தனை தளம்: இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பீஸ் பே, ஆா்டிஎக்ஸ் பே, போக்கோ பே, ஆா்பிபி பே உள்ளிட்டவை அந்நிய குடிமக்களால் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெலிகிராம் மற்றும் ஃபேஸ்புக் மூலம் ‘ஷெல்’ நிறுவனங்கள் மற்றும் தனிநபரின் வங்கிக் கணக்குளை குற்றவாளிகள் அணுகுகின்றனா். அதன்பின் இந்த கணக்குளை பயன்படுத்தி சட்டவிராத பணப் பரிவா்த்தனை தளத்தை அவா்கள் உருவாக்கி அதை போலி முதலீடு தளங்கள், சூதாட்டம், பங்கு வா்த்தகம் உள்ளிட்டவையில் ஈடுபடும் குற்ற குழுக்களுக்கு வழங்குகின்றனா்.