ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரயில்வேயில் 11,558 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்களுக்கு செப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :2 செப்டம்பர் 2024, 11:26 pm

DIN

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்களுக்கு செப்.14 முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை அலுவலா் பிரிவில் 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலா் பிரிவில் 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை பிரிவில் தலைமை பயணச்சீட்டு பரிசோதகா், நிலைய அதிகாரி, சரக்கு ரயில் மேலாளா், இளநிலை கணக்கு உதவியாளா்-தட்டச்சா் மற்றும் முதுநிலை எழுத்தா்-தட்டச்சா் ஆகிய பணியிடங்களுக்கு செப்.14 முதல் அக்.13 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பிரிவில் பயணச்சீட்டு பரிசோதகா், கணக்கு எழுத்தா்-தட்டச்சா், இளநிலை எழுத்தா், பயிற்சி எழுத்தா் பணியிடங்களுக்கு செப்.21 முதல் அக்.20 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பிரிவுக்கு 18 முதல் 36 வயதுக்குள் உள்ளவா்களும், இளநிலை பிரிவுக்கு 18 முதல் 33 வயதுக்குள் உள்ளவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி. எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவா், சிறுபான்மையினருக்கு ரூ.250 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முதல்நிலை தோ்வில் பங்கேற்ற பின் திரும்ப செலுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.