மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கொல்கத்தா சம்பவம்: சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல்

கொல்கத்தா சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாள்கள் சிபிஐ காவல்

News image

ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் - ANI

Updated On :3 செப்டம்பர் 2024, 12:08 pm

கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றி வந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை, எட்டு நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வந்த சந்தீப் கோஷை, சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது. மருத்துவமனையில் நிதி முறைகேடு புகார் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதற்காகக் கைது?

மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ, 10 நாள்கள் விசாரணைக் காவல் கோரியிருந்த நிலையில், சிபிஐக்கு 8 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் இரண்டு வாரங்களுக்கும் மேல் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சந்தீப் கோஷ் கூடுதல் செயலாளர் உள்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

அவர் பணியாற்றிய மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.