ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிவாரணப் பணிகளில் பங்கேற்காமல் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது: பவன் கல்யாண்

ஆந்திரம், தெலங்கானாவில் வெள்ள பாதிப்புக்கு ரூ. 6 கோடி வழங்கும் பவன் கல்யாண்

News image
பவன் கல்யாண் (கோப்புப் படம்)- இன்ஸ்டாகிராம் | பவன் கல்யாண்
Updated On :4 செப்டம்பர் 2024, 2:17 pm

DIN

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக, முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 1 கோடி வழங்குவதாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன்காரணமாக இரு மாநிலங்களிலும் பல இடங்கள் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், இரு மாநிலங்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆந்திரம் மற்றும் தெலங்கானா முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 1 கோடி வழங்குவதாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 4 கோடி வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பவன் கல்யாண் தெரிவித்ததாவது ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்க, மாநில அரசு விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் 200 கிராம பஞ்சாயத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 260 சிறப்பு துப்புரவு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

20,000-க்கும் மேற்பட்ட குப்பைக் குவியல்களை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 9 வரையில் 100 நாள் சுகாதார இயக்கம், குப்பை இல்லாத கிராமங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நீர் ஆதாரங்களில் ஏதேனும் மாசுபாடு ஏற்பட்டால், அதனைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மொத்தம் 9,932 தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், கசியும் குழாய்களிலும் உடனடி பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் முதலில் நிவாரணப் பணிகளில் பங்கேற்க வேண்டும்; அதன் பின்னரே, அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.