மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

என்று மாறும் இந்த நிலை? மகன்களின் உடலை தோளில் சுமந்துசென்ற பெற்றோர்

மருத்துவமனை இல்லாமல் காய்ச்சலால் பலியான மகன்களின் உடல்களை ஆம்புலன்ஸ் இல்லாததால் பெற்றோர் தோளில் சுமந்துசென்றனர்.

News image

மகன்கள் உடலுடன் பெற்றோர்

Updated On :5 செப்டம்பர் 2024, 9:42 am

மகாராஷ்டிர மாநிலத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிரிழந்த இரண்டு மகன்களின் உடல்களையும், பெற்றோர் தோளில் சுமந்துசென்ற விடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில், அஹேரி தாலுகாவைச் சேர்ந்த இளம் தம்பதி, தங்களது இரண்டு மகன்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற காட்சி வெளியாகியிருக்கிறது.

தங்களது கிராமத்திலிருந்து 15 கி. மீ. தொலைவில் மருத்துவமனை இருந்ததால், உரிய நேரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற முடியாமல், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு குழந்தைகளின் உடலை எடுத்து வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பெற்றோரே தங்களது குழந்தைகளின் உடலை சுமந்து வந்துள்ளனர்.

சாலையற்ற பாதைகளில், ஒரு தம்பதி, 10 வயதுக்கு உள்பட்ட தங்களது இரண்டு குழந்தைகளின் உடலையும் சுமந்தபடி வரும் விடியோவை, மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வாடேடிவார் பகிர்ந்துள்ளார்.

இரு குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர்கள் உரிய நேரத்தில் வராததால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, விதர்பாவில், ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.