நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

என்று மாறும் இந்த நிலை? மகன்களின் உடலை தோளில் சுமந்துசென்ற பெற்றோர்

மருத்துவமனை இல்லாமல் காய்ச்சலால் பலியான மகன்களின் உடல்களை ஆம்புலன்ஸ் இல்லாததால் பெற்றோர் தோளில் சுமந்துசென்றனர்.

News image
மகன்கள் உடலுடன் பெற்றோர்
Updated On :5 செப்டம்பர் 2024, 9:42 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிரிழந்த இரண்டு மகன்களின் உடல்களையும், பெற்றோர் தோளில் சுமந்துசென்ற விடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில், அஹேரி தாலுகாவைச் சேர்ந்த இளம் தம்பதி, தங்களது இரண்டு மகன்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற காட்சி வெளியாகியிருக்கிறது.

தங்களது கிராமத்திலிருந்து 15 கி. மீ. தொலைவில் மருத்துவமனை இருந்ததால், உரிய நேரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற முடியாமல், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு குழந்தைகளின் உடலை எடுத்து வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பெற்றோரே தங்களது குழந்தைகளின் உடலை சுமந்து வந்துள்ளனர்.

சாலையற்ற பாதைகளில், ஒரு தம்பதி, 10 வயதுக்கு உள்பட்ட தங்களது இரண்டு குழந்தைகளின் உடலையும் சுமந்தபடி வரும் விடியோவை, மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வாடேடிவார் பகிர்ந்துள்ளார்.

இரு குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர்கள் உரிய நேரத்தில் வராததால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, விதர்பாவில், ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.