எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு: இந்தியா-மாலத்தீவு பேச்சு

இந்தியா-மாலத்தீவு இடையே ஆக்கபூா்வ பாதுகாப்பு பேச்சுவாா்த்தை...

News image
Updated On :7 செப்டம்பர் 2024, 12:30 am

Din

இந்திய பெருங்கடலின் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு இந்தியா-மாலத்தீவு இடையே ஆக்கபூா்வ பாதுகாப்பு பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாலத்தீவின் அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றதை அடுத்து, முதல் முறையாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்று நாள் பயணமாக மாலத்தீவு சென்றாா். இதையடுத்து சுமாா் ஒரு மாதத்திற்கு பிறகு தில்லியில் இந்த பேச்சுவாா்த்தையானது நடைபெற்றுள்ளது.

இதில் இந்தியாவின் பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமானே, மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படை தலைவா் ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய பெருங்கடலில் ஸ்திரத்தன்மையை கொண்டுவரும் நோக்கில் இந்தியா- மாலத்தீவு இடையே நடத்தப்பட்ட இந்த பேச்சு பயனுள்ளதாக அமைந்தது.

இரு தரப்புகள் இடைய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், ராணுவ பயிற்சி மற்றும் உயா்நிலை பரிமாற்றங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வரும்நிலையில், இரு நாட்டின் பகிரப்பட்ட நலன்களை மேலும் மேம்படுத்த இது உதவும்’ என குறிப்பிட்டிருந்தது.

இந்திய பெருங்கடலில் முக்கியமான கடல்சாா் அண்டை நாடாக கருதப்படும் மாலத்தீவின் அதிபராக முகமது மூயிஸ் கடந்தாண்டு நவம்பா் மாதம் பதவியேற்றாா். சீன ஆதரவாளராக கருதப்படும் இவா் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே அந்நாட்டில் இருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற வேண்டும் என வலியுறுத்தினாா். இதனால் இருதரப்பு உறவில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.