யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் தொடர் வன்முறை: பாதுகாப்பு அதிகரிப்பு

மணிப்பூரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
மணிப்பூர்.
Updated On :8 செப்டம்பர் 2024, 8:35 am

DIN

மணிப்பூரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஞாயிற்றுக்கிழமை இதுவரை புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பாதுகாப்புப் படையினருடன் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்பால் பள்ளத்தாக்கின் விளிம்புப் பகுதிகளில் ட்ரோன்களை தடுக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அசாம் ரைபிள்ஸ் நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதனிடையே மொராங்கில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட் லாஞ்சர் மியான்மரில் வாங்கப்பட்டதா? வங்கதேசத்தில் வாங்கப்பட்டதா? என அவர்கள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாகி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், ஜிரிபாம் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சனிக்கிழமை புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றனா். இத்தீவிரவாதிகள் மலைப் பகுதியில் இருந்து வந்தவா்களாவா். இக்கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடா்பாக இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில அமைச்சா்கள் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வா் பிரேன் சிங் சனிக்கிழமை மாலையில் அவசர ஆலோசனை நடத்தினாா். அண்மைக் காலமாக மலை மாவட்டங்களைச் சோ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், இதைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக பிஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரு இடங்களில் ராக்கெட் குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். மறைந்த முன்னாள் முதல்வா் ஒருவரின் வீட்டை குறிவைத்து குண்டு வீசப்பட்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மலை மாவட்டமான சுராசந்த்பூரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்குள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, தீவிரவாதிகளின் 3 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், ராணுவ ஹெலிகாப்டா் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில் அண்மையில் தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்தனா். இந்தச் சூழலில், பிஷ்ணுபூா், கிழக்கு இம்பால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவில் பல ட்ரோன்கள் பறந்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. எதிா் தரப்பினா் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்துவது மணிப்பூரில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.