3 மாடிக் கட்டடம் இடிந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. மேலும் 3 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து இன்று(செப். 8) மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னெளவின் டிரான்ஸ்போா்ட் நகா் பகுதியில் இருந்த இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடை ஒன்றும், சேமிப்பு கிடங்கும் செயல்பட்டு வந்தன. முதல் தளத்தில் மருத்துவ சேமிப்பு கிடங்கும், இரண்டாவது தளத்தில் வெட்டுக் கருவிகள் சேமிப்பு கிடங்கும் செயல்பட்டன. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டடத்தில் தற்போது சில கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட 28 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தர பிரதேச அரசு 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

நீலகிரியில் பழங்குடியினரின் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு: யாக்கை அமைப்பு தகவல்

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் பெண் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைப்பு

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் ஏப். 7-இல் இறுதி விசாரணை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


