செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பிவாண்டியில் நான்கு தளங்கள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியானது தொடர்பாக...

News image

மகாராஷ்டிரம் மாநிலம் பிவாண்டியில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு 'கோஹினூர்' கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த இடத்தில், வெள்ளிக்கிழமை (ஜூலை 31) மீட்புக் குழுவினரும் அங்கு கூடியுள்ள மக்களும். - பிடிஐ

Updated On :31 ஜூலை 2026, 11:51 am IST

மகாராஷ்டிரம் மாநிலம் பிவாண்டியில் நான்கு தளங்கள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர்; மேலும் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

மகாராஷ்டிரம் மாநிலம் பிவாண்டி உள்ள பவர்லூம் (விசைத்தறி) நகரமான பாலாஜி நகரில், நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு கட்டடம் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அந்த கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் 12 வீடுகள் என மொத்தம் 48 வீடுகள் இருந்தன. மேலும், உள்ளாட்சி அமைப்பால் இது ஆபத்தான கட்டடம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டடத்தில் விரிசல் விழுந்து சப்தம் வந்தபோது, சில குடியிருப்பாளர்கள் கட்டடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோதே, கட்டடத்தின் 'பி' பிரிவு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இடிபாடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், பல குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற உதவியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, ஆறு முதல் ஏழு பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, தாணே பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தீயணைப்புத் துறை ஆகியவற்றின் குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சம்பவ இடத்தில் மோப்ப நாய் படை, நான்கு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக மண் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த சிறுவன் ஒருவனை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

Summary

Nine killed as residential building collapses in Maharashtra's Bhiwandi; seven still feared trapped under debris

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.