மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக, அந்த மாநிலத்தில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை(செப்.10) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கவும், மாநில உள்துறைச் செயலர் மற்றும் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத்துறை தலைமையகத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை(செப்.10) பேரணியாகச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போராடும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “எங்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை, பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நீதி கிட்டவில்லை. இதையடுத்து பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடருவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு பயன்பாடு! என்ஐஏவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


