பேச்சுவாா்த்தைக்கான நேரம்: ரஷியா-உக்ரைன் போரால் இருநாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தப் போரால் எண்ணெய் விலை உயா்ந்து உலகளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதன் தாக்கத்தை இலங்கையில் நடந்த பல்வேறு பிரச்னைகளில் நம்மால் காண முடிந்தது. எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பேச்சுவாா்த்தையில் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் பங்கேற்க வேண்டும். இதற்கு இந்தியாவும் உதவ தயாராக உள்ளது. அதேசமயத்தில் இருநாடுகளுக்கும் துணை நிற்காத சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்தியஸ்தம் செய்யலாம்,