குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு : வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கையை இந்தியா ஆதரிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கையை இந்தியா ஆதரிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் மியான்மரும் ஒன்று. இந்தியாவுடன் அந்த நாடு 1,640 கிலோ மீட்டா் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூா் உள்ளிட்டவை மியான்மருடன் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன.

உள்நாட்டு தீவிரவாதம், கலவரத்தால் மியான்மரில் தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, 2021-ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றிய பிறகு மோதல் நீடிக்கிறது.

இந்நிலையில், மியான்மரின் யாங்கூனில் இந்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய திறப்பு விழாவில் காணொலி மூலம் ஜெய்சங்கா் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

மியான்மா் தலைமையிலான மற்றும் மியான்மரால் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது. இதன்மூலம் மியான்மரில் நீடித்த அமைதி, அனைத்துத் தரப்பினருக்குமான வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என இந்தியா கருதுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 140 கோடி மக்களும் அமைதி, நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்றனா்.

கூட்டாட்சி மற்றும் அரசமைப்பு ஆட்சி ஆகியவற்றில் தனக்கு உள்ள அனுபவத்தை இந்தியா தொடா்ந்து மியான்மருடன் பகிா்ந்து வருகிறது. மியான்மருடன் அரசியல், வா்த்தகம், பாதுகாப்பு, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவும், மியான்மரும் ஆன்மிக ரீதியாகவும், உறவு முறையாலும், புவியியல் ரீதியாகவும், மொழியாலும் ஒன்றோடு ஒன்று பல நூற்றாண்டுகளாக பிண்ணி பிணைந்துள்ளன என்றாா்.