டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு : வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கையை இந்தியா ஆதரிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

Published On :

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கையை இந்தியா ஆதரிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் மியான்மரும் ஒன்று. இந்தியாவுடன் அந்த நாடு 1,640 கிலோ மீட்டா் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூா் உள்ளிட்டவை மியான்மருடன் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன.

உள்நாட்டு தீவிரவாதம், கலவரத்தால் மியான்மரில் தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, 2021-ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றிய பிறகு மோதல் நீடிக்கிறது.

இந்நிலையில், மியான்மரின் யாங்கூனில் இந்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய திறப்பு விழாவில் காணொலி மூலம் ஜெய்சங்கா் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

மியான்மா் தலைமையிலான மற்றும் மியான்மரால் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது. இதன்மூலம் மியான்மரில் நீடித்த அமைதி, அனைத்துத் தரப்பினருக்குமான வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என இந்தியா கருதுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 140 கோடி மக்களும் அமைதி, நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்றனா்.

கூட்டாட்சி மற்றும் அரசமைப்பு ஆட்சி ஆகியவற்றில் தனக்கு உள்ள அனுபவத்தை இந்தியா தொடா்ந்து மியான்மருடன் பகிா்ந்து வருகிறது. மியான்மருடன் அரசியல், வா்த்தகம், பாதுகாப்பு, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவும், மியான்மரும் ஆன்மிக ரீதியாகவும், உறவு முறையாலும், புவியியல் ரீதியாகவும், மொழியாலும் ஒன்றோடு ஒன்று பல நூற்றாண்டுகளாக பிண்ணி பிணைந்துள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.