25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

போதைப் பொருள் வழக்கில் மகன் கைது: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த தந்தை

போதைப் பொருள் வைத்திருந்தது வாகன சோதனையில் அம்பலம்

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 1:50 pm

DIN

தனது மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஹிமாசலில் ஸ்வர்கட் பகுதியில் உள்ள கரகோடாவில் கிரத்பூர்-நெர்சௌக் நான்கு வழிப்பாதையில் தடுப்புகள் அமைத்து, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், புதன்கிழமையில் நடந்த சோதனையின்போது, குமர்வின் தொகுதியின் காங்கிரஸ் தலைவர் ஜாகிர் சிங் மேத்தாவின் மகன் உள்பட 2 பேர், ஒரு டாக்ஸியில் 45.60 கிராம் அளவிலான போதைப்பொருளைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவர்கள் இருவர் மீதும் போதைப் பொருள் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தனது தொகுதி தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி, மாநில காங்கிரஸ் தலைவரிடம் ஜாகிர் சிங் மேத்தா கடிதம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.