கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போதைப் பொருள் வழக்கில் மகன் கைது: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த தந்தை

போதைப் பொருள் வைத்திருந்தது வாகன சோதனையில் அம்பலம்

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 1:26 pm

தனது மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஹிமாசலில் ஸ்வர்கட் பகுதியில் உள்ள கரகோடாவில் கிரத்பூர்-நெர்சௌக் நான்கு வழிப்பாதையில் தடுப்புகள் அமைத்து, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், புதன்கிழமையில் நடந்த சோதனையின்போது, குமர்வின் தொகுதியின் காங்கிரஸ் தலைவர் ஜாகிர் சிங் மேத்தாவின் மகன் உள்பட 2 பேர், ஒரு டாக்ஸியில் 45.60 கிராம் அளவிலான போதைப்பொருளைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவர்கள் இருவர் மீதும் போதைப் பொருள் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தனது தொகுதி தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி, மாநில காங்கிரஸ் தலைவரிடம் ஜாகிர் சிங் மேத்தா கடிதம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.