25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் உத்தரவு!

அக்டோபா் 5 தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹரியாணா ஆளுநர் உத்தரவு!

News image
ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா- படம் | பண்டாரு தத்தாத்ரேயா எக்ஸ் தளப் பதிவு
Updated On :12 செப்டம்பர் 2024, 1:12 pm

DIN

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, தேர்தலுக்கு முன் சட்டப்பேரவையைக் கலைக்கும் முன்மொழிவுக்கு முதல்வர் நயாப் சைனி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை(செப்.11) ஒப்புதல் அளித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வியாழக்கிழமை(செப்.12) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதிய அரசு அமையும் வரை நயாப் சைனி முதல்வர் பொறுப்பில் நீடிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.