செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சித்தூரில் அரசுப் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி

சித்தூரில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

News image

நன்றி- படங்கள் V Chandramouli x வலைத்தளம்.

Updated On :13 செப்டம்பர் 2024, 11:58 am

சித்தூரில் அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம், சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.