அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைநகரான போர்ட்பிளேயரின் பெயரை 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை 'ஸ்ரீவிஜயபுரம்' என மாற்ற முடிவு செய்துள்ளோம்.
போர்ட் பிளேயர் என்ற பெயர் காலனித்துவப் பெயரைக் கொண்டிருப்பதால், ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கும் வகையில் இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் அந்தமான் தீவுகளுக்கு வரலாற்றில் ஈடு இணையற்ற பங்கு இருக்கிறது. சோழப் பேரரசில் கப்பற்படைத் தளமாகவும் இருந்த இந்தத் தீவுகள் இன்று முக்கியமான இடமாகவும் உள்ளன.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது நாட்டின் முதல் தேசியக் கொடியை முதலில் ஏற்றிய இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடி சென்ற செல்லுலார் சிறையும் இங்கே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பு: உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவு

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

சாலை போட முடியாவிட்டால் ஹெலிகாப்டர் தாருங்கள்: அமித் ஷாவுக்கு வந்த கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



