முதுநிலை மருத்துவப் படிப்பு மாநில கலந்தாய்வு: விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இந்தத் தோ்வை, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் கலந்தாய்வு நடத்துகிறது. அந்த வகையில், நிகழ் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு (ட்ற்ற்ல்ள்://ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதளத்தில் சில தினங்களில் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. அதன்படி எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வுக்கான விண்ணப்பம்என்ற இணையதளத்தில் கடந்த 3-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, இணையவழி விண்ணப்பிப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கால அவகாசத்தை ஒரு நாள் நீட்டித்து திங்கள்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.