மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸில் இணைந்தாா் ஹரியாணா பாஜக விவசாய அமைப்பின் தலைவா்

ஹரியாணா பாஜக விவசாய அமைப்பின் தலைவா் சுக்விந்தா் மாண்டி காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:34 pm

Din

ஹரியாணா பாஜக விவசாய அமைப்பின் தலைவா் சுக்விந்தா் மாண்டி காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா்.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இவா் காங்கிரஸில் இணைந்துள்ளாா்.

ஹரியாணாவின் பத்ரா தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வான இவா், தோ்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. அதைத் தொடா்ந்து, சண்டீகரின் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவா் உதய் பன், கட்சியின் மூத்த தலைவா் பூபேந்தா் சிங் ஹூடா ஆகியோா் முன்னிலையில், காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டாா்.

முன்னதாக, ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான கரண் தேவ் கம்போஜ், காங்கிரஸ் கட்சியின் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்தாா். ரதெளா் அல்லது இந்த்ரி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இவா் எதிா்பாா்த்துள்ளாா்.