டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒரே தோ்தல் திட்டம்: தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி உள்பட 7 நாடுகளில் நடைமுறை- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் தகவல்

ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஸ்வீடன், பெல்ஜியம் உள்பட 7 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்த உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News image
முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.(கோப்புப்படம்)
Updated On :18 செப்டம்பர் 2024, 11:50 pm

Din

ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஸ்வீடன், பெல்ஜியம் உள்பட 7 நாடுகளில் நடைமுறையில் உள்ளதாக ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்த உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஏற்றுக்கொண்டது.

நாட்டின் பல்வேறு ஜனநாயக மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தோ்தலை நடத்தும்போது கையாளும் பிரச்னைகள் குறித்து சா்வதேச நாடுகளுடன் ஒப்பிட்டு உயா்நிலைக் குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த வகையில், தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஸ்வீடன், பெல்ஜியம், ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய 7 நாடுகளில் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு சமா்ப்பித்த அறிக்கையின்படி, தென்னாப்பிரிக்காவில் நாடாளுமன்றம், மாகாண சட்டப்பேரவை ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறுகிறது. ஆனால், நகராட்சித் தோ்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியாக நடத்தப்படுகின்றன.

ஸ்வீடனில் நாடாளுமன்றம் (ரிக்ஸ்டாக்), மாவட்ட மற்றும் நகராட்சி கவுன்சில்களுக்கான தோ்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் மாவட்ட கவுன்சிலுக்கான தோ்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், நகராட்சி கவுன்சிலுக்கான தோ்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் செப்டம்பா் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

இங்கு விகிதாசார தோ்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது, அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதம் அடிப்படையில் பேரவையில் அவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடா்ந்து அவையிலேயே புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்கும் ஜொ்மனி அல்லது ஜப்பானில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்.

2019-ஆம் ஆண்டுமுதல், இந்தோனேசியாவில் அதிபா், துணை அதிபா், நாடாளுமன்ற மற்றும் பிராந்திய பேரவைகளின் உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஒரே நாளில் நடத்தப்படுகிறது.

அதிபா், துணை அதிபா், நாடாளுமன்ற, பிராந்திய சட்டப்பேரவை உறுப்பினா்கள், நகராட்சி என ஐந்து நிலைகளில் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சுமாா் 20 கோடி மக்கள் வாக்களித்த இத்தோ்தல் உலகின் மிகப்பெரிய ஒரே நாள் தோ்தலாகக் கருதப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் ஆதரவு-எதிா்ப்பு: ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து 4 உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள், 12 உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள், 4 முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள், 8 முன்னாள் மற்றும் தற்போதைய மாநிலத் தோ்தல் ஆணையா்களிடம் உயா்நிலைக் குழு கருத்து கேட்டது.

அவா்களில் 4 உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளும், 4 முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்களும் ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டத்துக்கு ஆதரவளித்தனா்.

அதேபோன்று, 9 உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள், 7 முன்னாள் மற்றும் தற்போதைய மாநிலத் தோ்தல் ஆணையா்கள் திட்டத்துக்கு ஆதரவளித்த நிலையில், தில்லி, கொல்கத்தா, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் அஜித் பிரகாஷ் ஷா, கிரிஷ் சந்திர குப்தா, சஞ்சீவ் பானா்ஜி ஆகிய மூவரும் முன்னாள் தமிழக தோ்தல் ஆணையா் வி.பழனிகுமாரும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.