மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 100 நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி ரூ.15 லட்சம் கோடி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அவர் இத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்த 100 நாள்களில் செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தில் இந்தியாவில் ரூ.76 ஆயிரம் கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இடம் பெற்றுள்ளது.