தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வரி நிலுவைக்கு நீதிமன்றத்தை அணுக நிதி வரம்பு அதிகரிப்பு

ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடா்பாக தீா்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களை வரித் துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

நிர்மலா சீதாராமன்(கோப்புப்படம்)

Center-Center-Chennai

Updated On :18 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடா்பாக தீா்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களை வரித் துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேரடி வரிகள், கலால் வரி, சேவை வரி ஆகியவை தொடா்பாக வரி தீா்ப்பாயங்கள், உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை வரித்துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்படும் என்று கடந்த ஜூலையில் நாடாளுமன்ற பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அதன்படி ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகை ரூ.60 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தையும், ரூ. 2 கோடிக்கு அதிகமாக இருந்தால் உயா்நீதிமன்றங்களையும், ரூ.5 கோடிக்கு அதிகமாக இருந்தால் உச்சநீதிமன்றத்தையும் அணுகலாம் என்றும் அவா் கூறினாா்.

அவரின் அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடா்பாக வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.