சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல்!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களைக் குறிவைத்து மோசடி கும்பல் ஒன்று செயல்படுகிறது.

News image
நீட் தேர்வு
Updated On :19 செப்டம்பர் 2024, 10:23 am

DIN

ஏற்கனவே நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் நீட் தேர்வு எழுதிய மற்றும் எழுதவிருக்கும் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை குறிவைத்து ஒரு மோசடி நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோசடி கும்பல் ஒன்று, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து மாணவர்களை தொடர்புகொண்டு, பெரிய பெரிய மருத்துவக் கல்லூரிகளில் இடம்வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து வருவது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 12 மாணவர்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு பல கோடிக் கணக்கான பணத்தை பறித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ இடம்பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.30 முதல் 40 லட்சம் தேவைப்படும் என வலைவிரிக்கிறார்கள்.

இது குறித்து 21 வயது மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். அதில், மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு பெண் தொலைபேசியில் கூறியதாகவும், அதற்கு ரூ.35 லட்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அவர்களை நேரில் சந்தித்தபோது, நாட்டில் உள்ள முக்கயிமான ஐந்து கல்லூரிகளின் பட்டியலை அளித்து, எதில் சேர்க்கை வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒன்றைத் தேர்வு செய்ததும், முன்பணமாக ரூ.7.5 லட்சம் கேட்டுள்ளனர். இது குறித்து மாணவரும் பெற்றோரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் காவல்துறையினருக்கு இந்த தகவல் தெரிய வந்தத. இதையடுத்து, அந்த மோசடி கும்பலைப் பிடிக்க திட்டமிட்டு, பணம் கொடுப்பதாக அழைத்துள்ளனர். பணம் வாங்க வந்தவர்களை கைது செய்து அவர்களிடம் முறைப்படி விசாரணை நடந்து வருகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரங்களை எப்படி மோசடி கும்பல் பெறுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.