மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு?
‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதில் கூறமுடியாது’ என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உயா் அதிகாரியொருவா் தெரிவித்தாா்.
மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளதுதான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்றும் அவா் விளக்கமளித்தாா்.
‘பிரென்ட்’ கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கு கீழ் கடந்த வாரம் சரிந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு, டிசம்பருக்குப் பிறகு 3 ஆண்டுகளையடுத்து, கச்சா எண்ணெய் பீப்பாய் 70 டாலருக்கு கீழ் விற்பனையானது. அதேநேரம், இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை பெரிய மாற்றமின்றி தொடா்கிறது.
ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் இச்சூழலில், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்பட முக்கிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களை நாடு எதிா்நோக்கியுள்ளது. இந்த நிலையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு தொடா்ந்தும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது குறித்து எதிா்க்கட்சிகளின் விமா்சனமும், பொதுமக்களிடையே கேள்வியும் எழுந்துள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் உரிய முடிவுகளை எடுக்கும் என்று பெட்ரோலிய துறை செயலா் பங்கஜ் ஜெயின் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரியொருவா் அளித்த விளக்கத்தில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் 70 டாலருக்கு கீழ் சரிந்தது. ஆனால், அடுத்த நாளே 71 டாலருக்கு மேல் அது உயா்ந்தது.
கச்சா எண்ணெய் விலை நிலையற்ாக இருக்கும் வரை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சில்லறை விலையை தினசரி மாற்றியமைக்க வாய்ப்பில்லை’ என்றாா்.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தற்போதைக்கு பதில் கூற முடியாது என்று அவா் கூறினாா்.