மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாலுவுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் அனுமதி: சிபிஐ பதில்

அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்றுள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 8:16 am

பிடிஐ

நில மோசடி வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்றுள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாகக் குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி, மகள்கள் மிசா பாரதி, எம்.பி.சந்தா உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6ம் தேதி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரியின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அதிகாரிகளின் அனுமதி கிடைத்துள்ளதாக சிபிஐ தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கூடுதல் தகவல்கள் பெறுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.