திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர்

திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Pralhad Joshi
அமைச்சர் பிரகலாத் ஜோஷிENS
Published on
Updated on
1 min read

திருப்பதி லட்டு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

முன்னதாக, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிருந்தார்.

திருமலை ஏழுமலையான்கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் நாரா லோகேஷும் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு எதிராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லியில் இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com