டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விமானப் படைக்கு புதிய துணைத் தளபதி!

இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
எஸ்.பி. தார்கர் - ANI
Updated On :25 செப்டம்பர் 2024, 3:48 pm

DIN

இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங்கைத் தொடர்ந்து, எஸ்.பி. தார்கர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானியான எஸ்.பி. தார்கர், 3600 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் வாய்ந்தவர். டேஹ்ராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி முன்னாள் மாணவராவார். மேலும் புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியிலும் பயின்றுள்ளார்.

வெல்லிங்டன் பாதுகாப்பு சேவைக் கல்லூரி, அமெரிக்க ஏர் வார் கல்லூரியிலும் பயின்ற அனுபவம் கொண்டவர். ஜூன் 1985 இல் விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட எஸ்.பி. தார்கர், விமானப் படை பயிற்றுவிப்பாளர். இவர் விமானப்படை தேர்வாளராகவும் இருந்துள்ளார்.

பாதுகாப்பு சேவை கல்லூரி மற்றும் செகந்தராபாத்திலுள்ள விமானப் படை கல்லூரியில் இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்திய விமானப்படை தளபதியாக உள்ள விவேக் ராம் செளத்ரி செப். 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதனையொட்டி, விமானப் படையின் தற்போதைய துணைத் தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் பிரீத்சிங், அடுத்த தளபதியாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.