மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒரே திட்டத்தை 6-வது முறையாக தொடக்கிவைக்கிறார் பிரதமர்: சுப்ரியா சுலே

பணி அதிகமுள்ள பிரதமர், ஒரே திட்டத்துக்காக 6 முறை வருவது அதிர்ச்சியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 செப்டம்பர் 2024, 8:16 am

DIN

புணே மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பிரதமர் மோடி ஏற்கெனவே 5 முறை வந்துள்ளதாகவும், பணி அதிகமுள்ள பிரதமர், ஒரே திட்டத்துக்காக 6 முறை வருவது அதிர்ச்சியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில், மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவிருந்தார்.

புணேவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புணேவுக்கு இன்று வருவதாக திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் புணே பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'பிரதமர் மோடி வரவிருந்த, புணே மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழா ஏற்கெனவே 5 முறை நடந்துள்ளது. இன்று பிரதமர் மோடி வந்திருந்தால் 6 ஆவது முறையாக புணே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடக்கி வைத்திருப்பார்.

பணி மிகுதியாக உள்ள பிரதமர் போன்ற நபரிடம், ஒரே திட்டத்துக்காக மகாராஷ்டிர அரசு நேரம் கேட்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

எனினும், மழை காரணமாக அவர் புணேவுக்கு வர முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. விரைவில் அவர் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மெட்ரோ மூடப்பட்டுவிடக் கூடாது' என்றார்.

முன்னதாக புணே மெட்ரோ ரயில் தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சியும் விமரிசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.