டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஒரே திட்டத்தை 6-வது முறையாக தொடக்கிவைக்கிறார் பிரதமர்: சுப்ரியா சுலே

பணி அதிகமுள்ள பிரதமர், ஒரே திட்டத்துக்காக 6 முறை வருவது அதிர்ச்சியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :26 செப்டம்பர் 2024, 1:46 pm IST

புணே மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பிரதமர் மோடி ஏற்கெனவே 5 முறை வந்துள்ளதாகவும், பணி அதிகமுள்ள பிரதமர், ஒரே திட்டத்துக்காக 6 முறை வருவது அதிர்ச்சியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில், மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவிருந்தார்.

புணேவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புணேவுக்கு இன்று வருவதாக திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் புணே பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'பிரதமர் மோடி வரவிருந்த, புணே மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழா ஏற்கெனவே 5 முறை நடந்துள்ளது. இன்று பிரதமர் மோடி வந்திருந்தால் 6 ஆவது முறையாக புணே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடக்கி வைத்திருப்பார்.

பணி மிகுதியாக உள்ள பிரதமர் போன்ற நபரிடம், ஒரே திட்டத்துக்காக மகாராஷ்டிர அரசு நேரம் கேட்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

எனினும், மழை காரணமாக அவர் புணேவுக்கு வர முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. விரைவில் அவர் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மெட்ரோ மூடப்பட்டுவிடக் கூடாது' என்றார்.

முன்னதாக புணே மெட்ரோ ரயில் தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சியும் விமரிசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.