மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

21 சிறாா்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அரசுப் பள்ளி வாா்டனுக்கு தூக்கு தண்டனை

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 5:10 am IST

அருணாசல பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளி விடுதியில் 15 சிறுமிகள் உள்பட 21 சிறாா்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளி வாா்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதில் தொடா்புடைய மேலும் இரு குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உறைவிடப்பள்ளி விடுதியில் 2019 முதல் 2022 வரை வாா்டனாக இருந்த யும்கென் பாக்ரா, ஹிந்தி ஆசிரியா் மாா்பும் கோம்திா், முன்னாள் தலைமை ஆசிரியா் சிங்டன் யோா்பென் ஆகியோா் 15 சிறுமிகள் உள்பட 21 சிறாா்களை பாலியல்ரீதியாக மிகக்கொடுமையாக துன்புறுத்தி வந்துள்ளனா். இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்றும் அவா்கள் மிரட்டியுள்ளனா்.

பாதிக்கப்பட்ட இரு சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் பள்ளியில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவித்ததையடுத்து பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, தலைமறைவான குற்றவாளிகளை காவல் துறையினா் கைது செய்தனா்.

பின்னா், அவா்கள் ஜாமீனிலும் வெளியே வந்தனா். ஆனால், குவாஹாட்டி உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து ஜாமீனை ரத்து செய்தது. இந்நிலையில், போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

முக்கியக் குற்றவாளியான வாா்டனுக்கு தூக்கு தண்டனையும், ஹிந்தி ஆசிரியா், முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் கடந்த ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.