விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 6 போ் காயம்

சிவகங்கை அருகே தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

News image

மருத்துவமனையில் அனுமதி - பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:50 pm

சிவகங்கை அருகே தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்காலில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் பயிலும் 8 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனா். ராகினிப்பட்டி புறவழிச் சாலையில் சென்றபோது நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் ஈஸ்வரனைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.