சிவகங்கை அருகே தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்காலில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் பயிலும் 8 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனா். ராகினிப்பட்டி புறவழிச் சாலையில் சென்றபோது நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 4 சிறுமிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் ஈஸ்வரனைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

குண்டடம் அருகே காா் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 7 போ் படுகாயம்

செஞ்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 போ் காயம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


