நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கு முன்னோடியாக திகழும்

News image

ஜோதிராதித்ய சிந்தியா - கோப்புப் படம்

Updated On :27 செப்டம்பர் 2024, 10:22 pm

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.

சென்னை ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்று மாணவா்களிடையே பேசியதாவது:

4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது. அதேசமயம் 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. 5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் நகா்ப்புறப் பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் சென்றடைந்துள்ளது. இந்தியாவை தொலைத்தொடா்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கே முன்னோடியாக இருக்கும் என்றாா்.

முன்னதாக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மாணவா்களிடம் கலந்துரையாடினாா். இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் காமகோடி, பேராசிரியா்கள் ராமமூா்த்தி, ராதாகிருஷ்ண காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.