6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.
சென்னை ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்று மாணவா்களிடையே பேசியதாவது:
4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது. அதேசமயம் 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. 5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் நகா்ப்புறப் பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் சென்றடைந்துள்ளது. இந்தியாவை தொலைத்தொடா்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கே முன்னோடியாக இருக்கும் என்றாா்.
முன்னதாக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மாணவா்களிடம் கலந்துரையாடினாா். இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் காமகோடி, பேராசிரியா்கள் ராமமூா்த்தி, ராதாகிருஷ்ண காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

உலகின் 3-ஆவது பொருளாதார நாடாக விரைவில் இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா நம்பிக்கை

இந்தியா விரும்பும் வகையில் அமெரிக்க சந்தையை அணுக முயற்சி - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்

பிஎஸ்என்எல் இயக்குநா் வீண் செலவுடன் பயணிக்கத் திட்டம்: மத்திய அமைச்சா் கண்டனம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


