
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மின்னல் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கில்சிபூர் தாலுகாவில் உள்ள மெஹ்ராஜ்புரா கிராமத்தில் ராஜு சென்(45) அவரது மனைவி கிருஷ்ணா பாய்(40) மகன் ராஜ் சென்(15), மகள் பிரியங்கா(17) ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் தம்பதி உள்பட மகன் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராஜுவின் மகள் பிரியங்கா காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக மாவட்ட நிர்வாகம் தலா ரூ. 10,000 வழங்கியுள்ளதாக கில்சிப்பூர் நீதிபதி சுஷில் குமார் தெரிவித்தார்.
மேலும் இறந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.