இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஓடும் ரயிலில் செல்போனை பறித்தவர் கைது

ரயிலின் படிகளில் பயணிக்கும் பயணிகளின் மீது கற்களை வீசி தாக்குதல்

கோப்புப் படம்

Published On :

ஓடும் ரயிலின் படிகளில் பயணிக்கும் பயணிகளின் மீது கற்களை வீசி செல்போனை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்கள் மீது முகமது ஷமீம் என்பவர் கற்களை வீசி, ரயில் படிகளில் அமர்ந்திருக்கும் பயணிகளின் செல்போன்களை பறித்து வருவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையில் யமுனா பாலம் அருகே சென்ற சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் மீதும் கற்களை வீசியுள்ளார், முகமது ஷமீம். அப்போது, பயணி ஒருவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, முகமது ஷமீமை அடையாளம் நபராகக் கொண்டு, ரயில்வே சட்டத்தின் 153, 147 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முகமது ஷமீமை, கௌகத் ரயில் வழித்தடத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்பு படை கைது செய்தது.

முகமது ஷமீம் மீது ஏற்கனவே பலதரப்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.